Saturday, November 16, 2013

காதல் .......!!!!!


கண்ணை மூடினாலும்...
                       -பார்வை தெரியும்;
காதலித்துப் பார்...
அதன் அர்த்தம் உனக்கு புரியும்!

*****
தவம் இருந்தாலும்...
                       -தூக்கம் வராது;
ஆனால்...
கனவு மட்டும்...
                       -கேட்க்காமலே வரும்!



 ****
வெயில்...
                       -சுட்டெரித்துக் கொண்டிருக்கும் ;
ஆனால்...
உனக்கு மட்டும்...
                       -இடி மின்னலுடன் மழை பெய்யும்!
*****

எந்த நாட்டில்...
                       -செய்த கண்ணாடி என்று தெரியவில்லை;
அதில்...
உன் முகத்தை பார்த்தால்....
                       -அவளின் முகம் தான் தெரியும்!
*****
 புத்தகம்...
                       -உனக்கு தொலைக்காட்சியாகும்;
ஆனால்...
அதில்...
                       -அவள் உருவம் மட்டும் ஒளிபரப்பாகும்!


*****

உன் இதயத் துடிப்பே...
                       -நின்று விட்டதாய் தோன்றும்;
ஆனால்...
உனக்காக...
இன்னொரு இதயம்...
                       -அங்கு துடித்துக்  கொண்டிருக்கும்!!!

                                                                               - மகேஷ்

0 comments:

Post a Comment